/* */

ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை

ஆரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்துவார்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
X

பெரியபாளையம் அருகே ஆரணியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இரவு பகல் என பாராமல் மணல் கொள்ளை தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை. தடுத்த நிறுத்த வேண்டும் என என பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இரவு நேரங்களிலும், அதிகாலை வேலைகளில் சட்ட விரோதமாக ஆற்றின் கரை மற்றும் ஆற்று படுகையில் உள்ள மணல் மூட்டைகளில் கட்டி வைத்து இரு சக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும் வைத்து ஆரணி, குமரப்பேட்டை, புது வாயில் செங்குன்றம், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாகவும், மூட்டை ரூபாய் 50 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் ஆரணி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், மணல் இருக்கும் இடத்தில் தண்ணீர் உறிஞ்சப்படாமல் சேமிப்பு இருக்கும் பட்சத்தில் ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள மங்கலம், புதுப்பாளையம், காரணி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றுகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறிய அவர்கள், இது போன்ற மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் வெகுவாக குறையும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர்.

தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் இது போன்ற மணல் கொள்ளைகளால் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையும் மட்டுமல்லாமல் கரையை உடைத்து மணல் எடுப்பதால் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடும் காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் அபாயம் உள்ளது. இது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட ஆரணி காவல்துறைக்கு தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதனை தட்டிக் கேட்க வேண்டிய போலீசாரை வேடிக்கை பார்ப்பதாக கூறியுள்ளனர். எனவே உயர் அதிகாரிகள் கண்டுகொண்டு மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 4 May 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?