/* */

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
X

காளை மாட்டை தாக்கிய காட்டு யானை.

கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனச்சரக மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி உள்ளது.

இந்நிலையில், வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை குத்தியாலத்தூர் ஊராட்சி இருட்டிபாளையம் திண்ணையூரில் புகுந்து அங்கு பெருமாள் என்பவரின் வீட்டின் முன்பு கட்டி இருந்த காளை மாட்டை தாக்கி உள்ளது. இதில் அந்த காளை மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

இறந்த காளை மாட்டிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலை கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வந்து விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 24 April 2024 7:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்