/* */

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் மழையால் சாலைகள் அடித்து செல்லப்பட்டு விட்டன.

HIGHLIGHTS

அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு: மழையால் அடித்து செல்லப்பட்ட சாலைகள்
X

அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நடந்து வரும்  மீட்பு பணி.

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக அருணாச்சலப் பிரதேச - சீன எல்லையில் போடப்பட்ட சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா எல்லையை ஒட்டிய பகுதியான திபாங் பள்ளத்தாக்கில் பெய்து வந்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஹுன்லி மற்றும் அனினி நகரங்களுக்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 33 அடித்து செல்லப்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளில் தீவிரமாக வருகின்றன. நிலச்சரிவு குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழைதான் இந்த நிலச்சரிவுக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டு கூறுகையில், "ஹுன்லிக்கும் அனினிக்கும் இடையே உள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாலை திபாங் பள்ளத்தாக்கை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் என்பதால், விரைவில் சாலையை பராமரிக்க அறிவுறுத்தியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அருணாசல பிரதேசம் சீன எல்லையில் உள்ள ஒரு முழுமையான இந்திய மாநிலம் ஆகும். ஆனால் அருணாசல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தனது நாட்டின் வரைபடத்தில் கூட அந்த பகுதிகளை சேர்த்து அவற்றிற்கு தனியாக பெயரும் சூட்டி உள்ளது. ஆனால் அந்த பகுதிகள் இன்று வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் தான் இருப்பதாக இந்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது அருணாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 April 2024 12:12 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்