/* */

ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!

பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ப.வேலூரில் போலீசாருக்கு யோகா  மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
X

பரமத்திவேலூரில் போலீசாருக்கான சிறப்பு யோகா மற்றும் தியானப்பயிற்சி நடைபெற்றது.

ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்

நாமக்கல் :

பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூர் உட்கோட்ட சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், ஏட்டுகள், எஸ்.ஐகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் நடைபெற்றது. ப.வேலூர், ஜேடர்பாளையம், நல்லூர், பரமத்தி, வேலகவுண்டம்பட்டி, மற்றும் ப.வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் உட்பட 7 போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம் ப.வேலூர் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாலும், அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் சோர்வை போக்கும் வகையில் நடைபெற்ற, இப்பயிற்சியினை ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும், யோகா பயிற்சியாளருமான நாமக்கல் ஆறுமுகம் முகாமில் கலந்துகொண்டு சிறப்பு பயிற்சி அளித்தார்.

Updated On: 5 May 2024 8:15 AM GMT

Related News