/* */

மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா

மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
X

மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா நிகழ்வு.

மதுரை மேலூர் வட்டார பாரம்பரிய அம்பலக்காரர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வெள்ளரி பட்டி அம்பலகாரராக விரகனூர் ரகுராம ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

பாண்டிய மன்னர்கள் காலத்தில் இருந்தே தங்களுக்கு கீழ் கட்டுப்பட்ட குறுநில மன்னர்களும், அவர்களுக்கு கீழ் ஜமீன், மிராசுதாரர்களின் ஆட்சி நடைபெற்றது.

அதில், மேலூர், வெள்ளியங்குன்றம், கள்ளந்திரி, வெள்ளலூர், வள்ளாலபட்டி, போன்ற ஊர்களில் கிராம தலைவராக, தங்கள் சமூக பாதுகாவலராக அம்பல காரர் பட்டம் வழங்கும் நிகழ்சி நடைபெறும்.

பழமையும், பாரம்பரியமும் கலாச்சாரத்தை எதிரொலிக்கும் விதமாக கிராம மூத்த வாரிசுகளுக்கு அம்பலகாரர் பட்டம் வழங்கப்படும். அம்பலகாரர் பட்டம் ஏற்ற பின் அவர் ஒரு நீதிபதியாக தன்னை சார்ந்தவர்களுக்கும் தனது கிராமத்தில் உள்ள பிற சமூகத்தினருக்கும், பாதுகாவலராகவும் செயல்படுவார்.

கோயில் விழாக்கள், இல்ல விழாக்கள், பஞ்சாயத்து தீர்ப்புகள் தனது ஊர் சார்பாக மற்ற ஊர்களில் நடைபெறும் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்குமே தலைமை பொறுப்பு ஏற்கும் அம்பலகாரர் விருப்பு வெறுப்புகளின்றி, தன்னலமில்லாமல் செயல்படும் பொறுப்பே "அம்பலகாரர் பட்டம் "

இதில், மேலூர் வட்டம் மத்தம் நாடு வெள்ளரி பட்டி கிராமத்தில் அழகச்சியார் வகையறா அம்பல காரர்களுக்கு, பாத்தியப்பட்ட அம்பலகாரர் பட்டத்திற்கு விரகனூர் மூக்கு சாமி அம்பலம் மகன் ரகுராமராஜன் (வயது 64). என்பவர் இன்று வெள்ளரி பட்டியில் 4-வது கரை அம்பல மாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல கிராமங்களில் இதுபோன்ற அம்பலகாரர், நாட்டாமை போன்ற பதவிகள் இருந்து வருகின்றன. இந்த பதவிகளில் இருப்பவர்கள் நீதி தவறாதவர்களாக இருந்து பிரச்சினைகளை தீர்த்து வைத்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 May 2024 9:59 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!