/* */

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல்

ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல்
X

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர்.சகாதேவன், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

ஈரோடு மாநகர் பகுதியில் ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

ஈரோட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் நலனுக்காக ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைத்து ஈரோட்டின் மையப்பகுதிகளான வீரப்பன்சத்திரம், பெரிய அக்ரஹாரம், திருநகர் காலனி மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய 4 இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்துள்ளது.

இந்த நீர்மோர் பந்தலை ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர்.சகாதேவன், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளையின் தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். இதில், ரோட்டரி முன்னாள் ஆளுநர் சிவசங்கரன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கமலநாதன், செயலாளர் விக்னேஷ்குமார், பொருளாளர் சுரேஷ், ஆத்மா அறக்கட்டளையின் செயலாளர் ராஜ மாணிக்கம், பொருளாளர் சரவணன் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், தொடர்ந்து 30 நாட்களுக்கு வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் கட்டாயம் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 4 May 2024 11:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!