‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின் மேற்கோள்கள்!
Baba Quotes in Tamil - எல்லாச் செயல்களையும் இறைவனின் செயல்களாகப் பார்த்தால், நாம் பற்றற்றவர்களாகவும், கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்போம் என்று மேற்கோள் சொல்லி இருக்கிறார் பகவான் சாய்பாபா.
HIGHLIGHTS
Baba Quotes in Tamil- தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அதிசய அற்புதங்களை நிகழ்த்திக் கொடுப்பவர் தான் சாய்பாபா. 20ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பத்தில் வாழ்ந்த இந்திய குருதான் சாய்பாபா. இவர் இந்தியாவில் பிறந்த சிறந்த துறவிகளில் சாய்பாபாவும் ஒருவர் தான். சாய்பாபாவை பற்றி நீங்கள் அறிந்திடாத பல தகவல்களைத் தான் இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.
சாய்பாபாவின் தோற்றம்
பாபா தனது 16வது வயதில் இந்தியாவில் மகாராஷ்டிராவின் ஷீரடி கிராமத்திற்கு முதல் முறையாக வந்தார். இவர் இளவயதில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து பல நாட்களாக உணவும் தண்ணீரும் இல்லாமல் ஆழ்ந்த தியானம் செய்து கொண்டிருப்பார்.
இவ்வாறு ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பாபாவைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். பிறகு அப்படியே அவ்வூரில் உள்ள பயாஜாபாய் என்றப் பெண் பாபாவிற்கு உணவு கொடுத்து தாயானார்.
படிப்படியாக பாபா தனது தங்குமிடத்தை அருகிலுள்ள மசூதிக்கு மாற்றினார். ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பாபாவை தரிசித்து வந்தனர். மசூதியில் பாபா துனி என்று அழைக்கப்படும் புனித நெருப்பை பராமரித்தார். பாபா பார்வையாளருக்கு புனித சாம்பலை வழங்கினார்.
அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் சாம்பல் சிறந்த மருந்து என்று மக்கள் நம்புகிறார்கள். பாபா அனைவருக்கும் கடவுள் மற்றும் அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்பார். பாபாவிற்கு சமைக்கும் பழக்கம் இருந்தது, அதுவே அவர்கள் வருகையின் போது அனைத்து பக்தர்களுக்கும் "பிரசாதமாக" விநியோகிக்கப்பட்டது.
பாபாவிடம் நோயைக் குணப்படுத்த வேண்டும், பிரச்சினைகள் தீர வேண்டும் என்று வேண்டி நிற்க அவரும் வருபவர்களுக்கு ஆசி வழங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி ஆன்மீக போதனைகளை, தத்துவங்களையும் கூறி இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் இறைவனாகப் போற்றப்பட்டார்.
சாய்பாபா 20ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட சாய்பாபா ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்டார். இவ்வாறு உலகப் புகழ்பெற்ற சாய்பாபா 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் உலகத்தை விடுத்து இறைவனிடம் சேர்ந்து இறைவனாக இன்று வரை போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இவர் மகாராஷ்டிராவில் இருந்து சீரடியில் சமாதியான இடம் தற்போது வரை புனித தலமாக மாறியிருக்கிறது.
சாய்பாபாவின் மேற்கோள்கள்
நீ நிச்சயம் முன்னேறுவாய்.. உன் மனதில் எதிர்காலத்தை பற்றிய பயம் இருந்தால் அதை தூக்கி எறிந்துவிடு..உன்னோடு நான் இருக்கிறேன்
தூங்காத இரவுகள் இருக்கலாம்..! ஆனால் விடியாத இரவுமில்லை.. முடியாத செயலுமில்லை வெற்றி நிச்சயம்..!
எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு.. அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. நான் இருக்கிறேன்..
நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதே.. உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால் இறைவன் உன்னை மேலே தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.நம்பிக்கையோடு நீ உன் கடமையை செய். உனக்கான அந்த நல்ல நாள் நிச்சயமாக உன்னை தேடி வரும்.
எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு.. அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. நான் இருக்கிறேன்..
பொறுமையோடு இரு உன் உழைப்பு என்றும் வீணாகாது.. வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
துணிந்து நில். உனக்கு துணையாக நானிருக்கிறேன்.
ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே, நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்…
உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது..
நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..!!!
கடவுள் உங்களிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து உங்களை ஒன்றுமில்லாதவராக்கினால், வருத்தப்படாதீர்கள், ஏனெனில் கடவுள் உங்களுக்கு புதிய வாழ்க்கையை கொடுக்கப் போகிறார். மேலும் அவர் உங்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கத் தொடங்குவார்.
உங்கள் வாழ்க்கையில் பல வருடங்களாக இருந்த இருள் இப்போது மறைந்துவிடும்.
எல்லாச் செயல்களையும் இறைவனின் செயல்களாகப் பார்த்தால், நாம் பற்றற்றவர்களாகவும், கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டவர்களாகவும் இருப்போம்.
பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை.
ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள்.
அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்.
அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி, கல்வி என்பது ஒரு வீணான செயலாகும்.
எந்தவொரு மகிழ்ச்சியும் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகாது.
தன்னலமற்ற சேவை மட்டுமே ஒருவரின் இதயத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதநேயத்தை எழுப்புவதற்கு தேவையான வலிமையையும் தைரியத்தையும் தருகிறது.
இன்றைய கல்வியானது, அன்றாட வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலையோ, மனஉறுதியையோ மாணவர்களுக்கு வழங்கவில்லை. கல்வித் துறை அறியாமையின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது.
நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம்.
தான் பிறந்த சேறு அல்லது தன்னைத் தாங்கும் நீரால் கூட பாதிக்கப்படாமல், சூரியன் வானத்தில் உதிக்கும்போது, தன் இதழ்களை விரிக்கும், தாமரையாக நீங்கள் இருக்க வேண்டும்.
எல்லாச் செயல்களும் எண்ணத்தின் விளைவுகளே, எனவே எண்ணங்களே முக்கியமானது.
இந்தப் பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம்.
பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை.
தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்.
உண்மையான அழகு உண்மையான கல்வியில் உள்ளது.
வாழ்க்கை என்பது ஒரு பாடல் - அதைப் பாடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு - அதை விளையாடுங்கள். வாழ்க்கை என்பது ஒரு சவால் - அதை எதிர்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு கனவு - அதை உணருங்கள். வாழ்க்கை என்பது ஒரு தியாகம் - அதை வழங்குங்கள். வாழ்க்கை என்பது ஒரு காதல் - அதை அனுபவியுங்கள்.
நீங்கள் என் உதவியையும் வழிகாட்டுதலையும் நாடினால், நான் உடனடியாக அதை உங்களுக்குத் தருவேன்.
இன்றைய கல்வி முறை கற்றவரை சுயநலவாதியாக்குகிறது. அந்த நபரை புலன்களுக்கு அடிமையாக்குகிறது. அதன் விளைவாக அந்த நபர் தனது தெய்வீக தன்மையை மறந்து விடுகிறார்.
இந்த உலகில் புதியது எது? எதுவும் இல்லை. இந்த உலகில் பழையது எது? எதுவும் இல்லை. எல்லாம் எப்பொழுதும் இருந்தது மேலும் எப்போதும் இருக்கும்.
நமது கர்மாவே நமது இன்பத்திற்கும் துக்கத்திற்கும் காரணம், அதனால் உனக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்.
இறைவனுடன் முழுமையான இணக்கத்துடன் வாழக் கற்றுக்கொண்டால் மட்டுமே உங்கள் எதிர்கால வாழ்வு மகிமையடையும்.
நீங்கள் உங்கள் அகக் கண்ணால் பார்க்கும்போது. நீங்கள் தான் கடவுள் என்றும் நீங்கள் அவரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் உணருவீர்கள்.
நம் வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் உருகிக்கொண்டிருக்கும் பனிக்கட்டி போன்றது. அது முழுமையாக உருகும் முன், அதை மற்றவர்களுக்கான சேவைக்கு அர்ப்பணியுங்கள்.
நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே நீங்கள் அறுவடை செய்வீர்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ, அதையே நீங்கள் பெறுவீர்கள்.
மற்றவர்களின் செயல்கள் அவர்களை மட்டுமே பாதிக்கும். உங்கள் சொந்த செயல்கள் மட்டுமே உங்களைப் பாதிக்கும்.
நான் இரத்தமும் சதையுமாக இல்லாவிட்டாலும், நான் என் பக்தர்களைக் காப்பேன். நீ என்னை நினைக்கும் கணத்தில் நான் உன்னுடன் இருப்பேன்.