/* */

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி மீண்டும் உறுதி

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தி மீண்டும் உறுதி
X

தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் சாதிவாரி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவில் 102 தொகுதிகளிலும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 88 தொகுதிகளிலும் என மொத்தம் இதுவரை 190 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. மே 7ஆம் தேதி குஜராத்தில் உள்ள 27 லோக்சபா தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் குஜராத் மாநிலத்தில்தான் அதிகபட்ச தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் பதான் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். ராகுல் காந்தி பேசுகையில் கூறியதாவது:-

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி மக்கள் உள்ளனர். ஆனால் கார்ப்பரேட், மீடியா, தனியார் மருத்துவமனைகள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு உயர் பதவிகள் போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவோம்.

அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஆளும் பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் திட்டமிடுகின்றன. இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக அவர்கள் உள்ளனர். இவர்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது/

இவ்வாறு ராகுல் காந்தி பேசியுள்ளார்.

Updated On: 1 May 2024 11:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?