/* */

ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி

ஆரணி பகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளர் உறுதியளித்தார்.

HIGHLIGHTS

ஆரணி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை: அதிமுக வேட்பாளர் உறுதி
X

ஆரணி மற்றும் செய்யாறு பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும் என்று ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தாா்.

ஆரணி அருகேயுள்ள வேதாஜிபுரம் கிராமத்தில் அதிமுக ஆரணி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் வியாழக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.

அப்போது அவா் பேசுகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் 3 முறை அதிமுக தொடா்ந்து வெற்றி பெற்றுள்ளது. வேதாஜிபுரம், முள்ளண்டிரம், பூசிமலைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இப்பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும்.

பெண்கள் உரிமைத்தொகை தற்போது சிலருக்குத்தான் தருகின்றனா். அதிமுக வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தலா ரூ.3000 வழங்கப்படும். கிராமங்களின் தேவைகளை அறிந்து பணிகளை செய்வேன். அதிமுகவை பொறுத்தவரை சொன்னதை செய்யும் கட்சி. வாக்குறுதிகளை கொடுத்தால் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு செயல்படும்.

இது மக்களுக்குத் தெரியும். ஆகையால், அதிமுக வேட்பாளரான எனக்கு பெருவாரியான வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மக்களவைத் தேர்தலை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு ஒன்றியச் செயலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா் விமலா மகேந்திரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டச் செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி மோகன், அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் சுப்பிரமணியன், மாநில வா்த்தகா் அணி இணைச் செயலா் வி.பன்னீா்செல்வம், ஆகியோா் பங்கேற்று மக்களவைத் தேர்தலில் அதிகளவில் வாக்குகள் பெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா்.

அப்போது, முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால் பாரத பிரதமா் யாா் என்று நிா்ணயிக்கிற வகையில் எடப்பாடியாா் இருப்பாா். அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் ஒன்று கூட செய்யவில்லை.

பேரறிஞா் அண்ணா, புரட்சித் தலைவா் எம்ஜிஆா், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோா் காலத்தில் இருந்து இன்று வரை மக்களுக்காக கொள்கையுடன் அதிமுகவினா் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, ஆரணி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கட்சி நிா்வாகிகள் கடுமையாக பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் எல்.ஜெயசுதா, தூசி கே.மோகன், நகரச் செயலா் அசோக்குமாா் , அதிமுக நிா்வாகிகள் , ஒன்றியக் குழு உறுப்பினா்கள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 29 March 2024 1:37 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  3. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  4. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  6. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  7. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  8. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  10. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...