/* */

இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய அமெரிக்கா..!

ஊழல் செய்தால் உங்கள் நாட்டில் அதிபர் பதவி தருவீர்களா? என்ற இந்தியாவின் காட்டமான கேள்வியால் ஜெர்மன் ஆடிப்போய் கிடக்கிறது.

HIGHLIGHTS

இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய அமெரிக்கா..!
X
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல முறைகேடுகளில் சிக்கி கைதுசெய்யபட்ட நிலையில் முதலில் முணுமுணுத்த நாடு ஜெர்மனி. அந்த நாட்டின் முணுமுணுப்பினை அறிந்த இந்தியா டில்லியில் உள்ள அந்த நாட்டிற்கான இந்திய தூதரை அழைத்து "உங்கள் நாட்டில் ஊழல் செய்தால் அதிபராக்கி மகிழ்வீர்களா? இல்லை விசாரிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பியது. ஆடிப்போன துாதர் கட்டாயம் விசாரிப்போம் என பதிலளித்தார். நாங்களும் அப்படி இவரை விசாரிக்கின்றோம், இந்த மனித உரிமை பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம்" என எச்சரித்து அனுப்பியது

ஏற்கனவே உலக பொருளாதார அடைவு நிலையில் எந்நேரமும் இந்தியா தன்னை வீழ்த்தி 3ம் இடம் பிடிக்கலாம் என அஞ்சும் ஜெர்மனி அத்தோடு ஒதுங்கி கொண்டது.

பின் அமெரிக்கா களத்துக்கு வந்து தன் வழமையான வார்த்தை ஜாலத்தை சொன்னது. "கெஜ்ரிவால் கைது செய்யபட்டது வருத்தம். அவர் மேலான விசாரணை நியாயமாக நடக்க விரும்புகின்றோம்" என கவலை தெரிவித்தது.

அமெரிக்காவின் கவலைக்கு பதில் கவலையினை டெல்லி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் இந்தியா தெரிவித்தது, குளோரியா பார்பெனா என்ற அதிகாரியிடம் "ஏ குளோரியாவே, உங்கள் நாட்டில் ஊழல் செய்தால் வெள்ளை மாளிகையில் வைத்து பாராட்டுவீர்களோ, உங்கள் நாட்டில் பொய் சொன்னாலே விடமாட்டீர்கள், இங்கு இவர் இவ்வளவு குழப்பம் செய்திருக்கின்றாரே, எப்படி விடுவது? இது உங்கள் நாடென்றால் என்ன செய்வீர்கள்?" என கேட்ட பின் அமெரிக்கா அமைதியாகி விட்டது.

கவனியுங்கள், கெஜ்ரிவாலுக்கு ரூ. 134 கோடி கொடுத்தோம் என்கின்றான் காலிஸ்தான் தலைவன். அவனுக்கு அடைக்கலமும் காவலும் கொடுத்து தன் நாட்டில் பொத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போது கெஜ்ரிவால் மாட்டியவுடன் மெல்ல முணங்கும் நாடும் அதே அமெரிக்கா தான். ஜெர்மன் கெஜ்ரிவாலருக்காக ஏன் உறுமுகின்றது என்றால் அங்கும் சில தொடர்பு இருக்கலாம் என்கிறது இந்திய அரசின் விசாரணை அமைப்பு. ஆக எல்லாம் கவனித்தால் என்ன புரிகின்றது?

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட உடனே ஜெர்மனியும், அமெரிக்காவும் பதறக் காரணம் என்ன என்பது விசாரித்தால் தெரிந்து விடும் என இந்திய விசாரணை அமைப்புகள் தெளிவாக தெரிவித்துள்ளன. விரைவில் இந்த விஷயத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.

Updated On: 29 March 2024 5:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்