/* */

பால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கில் பணம் முறைகேடு: தேனி எஸ்பி -யிடம் புகார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கில் இருந்து மாயமான பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தேனி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

பால் கூட்டுறவு சங்க வங்கி கணக்கில் பணம் முறைகேடு:  தேனி எஸ்பி -யிடம் புகார்
X

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திம்மரசநாயக்கனுார் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் ரூபாய் நுாதன முறையில் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தேனி எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுார் எம்.எஸ்.கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இந்தியன் வங்கியில் வைத்துள்ள கணக்கின் வாயிலாக சங்க வரவு செலவு பரிவர்த்தனைகள் காசோலைகள் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை இந்த கூட்டுறவு வங்கி கணக்கில் வரவு வைத்தது.

இந்நிலையில் இந்த வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சத்து இருபத்தி எட்டாயிரம் ரூபாய் பணத்தை யாரோ நுாதன முறையில் கையாடல் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்டறிந்து சங்க பணத்தை மீ ட்டுத்தருமாறு கூட்டுறவு சங்க தலைவர் ரெங்கசாமி தேனி எஸ்.பி. யிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப்புகார் மீது விசாரணை நடத்த ஆண்டிபட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.


Updated On: 11 July 2021 8:59 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?